ஓசூர் அருகே சிறுமி பாலியல் பலாத்காரம்; வாலிபர் கைது
ஓசூர் அருகே சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்
ஓசூர்:
ஓசூர் அருகே உள்ள பெரியதாசனப்பள்ளி தின்னா பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. சம்பவத்தன்று இந்த கிராமத்தில் உறவினர் வீட்டிற்கு வந்த கர்நாடக மாநிலம் சந்தாபுரத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சாம்சுந்தர் (வயது 30) என்பவர், ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து சிறுமி அவரது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் ஓசூர் டவுன் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சாம்சுந்தரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story