அதிக பாரம் ஏற்றி வந்த லாரி பறிமுதல்


அதிக பாரம் ஏற்றி வந்த லாரி பறிமுதல்
x
தினத்தந்தி 10 Feb 2021 9:15 PM GMT (Updated: 10 Feb 2021 9:15 PM GMT)

சேரன்மாதேவியில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி - களக்காடு சாலையில் தாசில்தார் பாலசுப்பிரமணியன் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் ரோந்து சென்றனர்.  கங்கணான்குளம் கரை அருகே சென்ற போது எதிரே பாறாங்கற்கள் ஏற்றி வந்த லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். இதில் ஆவணங்கள் சரியாக இருந்தும் அதிக அளவு பாறாங்கற்கள் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து, சேரன்மாதேவி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Next Story