நீடாமங்கலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைப்பு


நீடாமங்கலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 11 Feb 2021 1:14 PM GMT (Updated: 11 Feb 2021 1:14 PM GMT)

நீடாமங்கலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

நீடாமங்கலம்:-
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் அனுப்பி வைக்கும் பணி நேற்று நட ந்தது. இதை முன்னிட்டு நீடாமங்கலம், மன்னார்குடி, கூத்தாநல்லூர் ஆகிய தாலுகா பகுதிகளில் இயங்கிவரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 2 ஆயிரம் டன் சன்னரக நெல் 160 லாரிகளில் நீடாமங்கலம் ெரயில் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் பின்னர் சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ெரயிலின் 42 பெட்டிகளில் அடுக்கி வைத்தனர். இதைத்தொடர்ந்து அரவைக்காக நெல் மூட்டைகள் சரக்கு ரெயிலில் திருவண்ணாமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Next Story