மோட்டார்சைக்கிள், வெள்ளி சங்கிலி வழிப்பறி
கீழ்பென்னாத்தூர் அருகே வாலிபர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி மோட்டார்சைக்கிள், வெள்ளி சங்கிலி வழிப்பறி செய் நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்
கீழ்பென்னாத்தூர்
புதுச்ேசரி மாநிலம் கன்னிகோவில் கொதவள்ளிமேடு குறிஞ்சிநகர் பகுதியைச் சேர்ந்த சடகோபனின் மகன் விக்ரம் (வயது 21). இவருடைய நண்பர் சுதர்சனம் (21). இருவரும் ்நேற்று முன்தினம் திருவண்ணாமலை மாவட்டம் பருவதமலைக்கு மோட்டார்சைக்கிளில் கீழ்பென்னாத்தூர் வழியாக வந்து கொண்டிருந்தனர். மோட்டார்ைசக்கிளை விக்ரம் ஓட்ட, பின்னால் சுதர்சனம் அமர்ந்திருந்தார்.
தென்அரசம்பட்டு கிராமத்தில் உள்ள ஒரு அரசமரம் அருகில் சென்றபோது, அடையாளம் தெரியாத மர்மநபர்கள் 2 பேர் பின்தொடர்ந்து சென்று, மோட்டார்சைக்கிளை மடக்கி, அவர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி விக்ரம் அணிந்திருந்த வெள்ளிச்சங்கிலி, மோட்டார்சைக்கிளை வழிப்பறி செய்து கொண்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து விக்ரம் கீழ்பென்னாத்தூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத மர்மநபர்கள் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story