திருக்கோவிலூர் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் விஷம் குடித்து தற்கொலை


திருக்கோவிலூர் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 14 Feb 2021 5:06 PM GMT (Updated: 14 Feb 2021 5:06 PM GMT)

திருக்கோவிலூர் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவரது காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட  பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவரது காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் நிச்சயம்

திருக்கோவிலூர் அருகே உள்ள வடக்கு நெமிலி கிராமம் பிடாரம்பட்டி பாதையை சேர்ந்தவர் செல்வதுரை. இவரது மகள் சாரதா(வயது 24). இவருக்கு அவரது குடும்பத்தினர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
அதன்படி சாரதாவுக்கு சித்தலிங்கமடம் கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார் என்பவருடன் அடுத்த மாதம்(மார்ச்) திருமணம் நடைபெறுவதாக நிச்சயிக்கப்பட்டது. 

செல்போனில் பேசிய காதலன்

இந்த நிலையில் சம்பவத்தன்று சாரதா விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து அக்கம்பக்கத்தினர் அவரை சிகிச்சைக்காக சென்னை ஸ்டேன்லி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.
விசாரணையில் சாரதாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதை அறிந்து உளுந்தூர்பேட்டை தாலுகா வடபெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வேலாயுதம் மகன் சபரிநாதன் சாரதாவை செல்போனில் தொடர்பு கொண்டு நான் தானே உன்னை காதலித்தேன்? நீ எப்படி வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ளலாம்? என்று கூறி திட்டியதாகவும், இதனால் மனமுடைந்த சாராதா விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. 

கைது

இதுகுறித்து தகவலறிந்த திருக்கோவிலூர் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவச்சந்திரன், செந்தில்வாசன், புருஷோத்தமன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சாரதாவின் தற்கொலைக்கு காரணமான சபரிநாதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story