கும்பாபிஷேக விழா


கும்பாபிஷேக விழா
x
தினத்தந்தி 14 Feb 2021 5:19 PM GMT (Updated: 14 Feb 2021 5:19 PM GMT)

கும்பாபிஷேக விழா நடந்தது

சாயல்குடி
கடலாடி அருகே மேலச்சிறுபோது கிராமத்தில் உள்ள கருப்பணசுவாமி, ஸ்ரீ வீரமாகாளி கோவில் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம்  நடைபெற்றது. கோவில் நிர்வாக கமிட்டி தலைவர் சிவனு பூவன் தலைமை தாங்கினார். கோவில் கமிட்டி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். பூர்ணாகுதி, யாகசாலை பூஜைகள் நடைபெற்று கடம் புறப்பாடு செய்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அன்னதானம் நடைபெற்றது. இந்்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் செய்யதுஅலி பாத்திமா, மேலச்சிறுபோது ஊராட்சி தலைவர் சம்சாத் பேகம் முகமது ரபிக், ஓரிவயல் மலர்மதி, திருப்பதி சித்திரங்குடி கண்ணன், முன்னாள் ஊராட்சித் தலைவர் கலைச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story