பிரான்மலை குளத்தில் ‘டைவ்’ அடித்து குளிக்கும் சிறுவர்கள்
கடந்த மாதத்தில் சிவங்கை மாவட்டத்தில் நீரில் மூழ்கி 11 பேர் இறந்து விட்டனர். இந்த நிலையில் பிரான்மலை குளத்தில் சிறுவர்கள் டைவ் அடித்து குளித்தனர். அவர்களை பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது.
சிங்கம்புணரி,
கடந்த மாதத்தில் சிவங்கை மாவட்டத்தில் நீரில் மூழ்கி 11 பேர் இறந்து விட்டனர். இந்த நிலையில் பிரான்மலை குளத்தில் சிறுவர்கள் டைவ் அடித்து குளித்தனர். அவர்களை பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது.
குடிமராமத்து பணி
சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை பெரும்பாலான நீர்நிலைகள் புயல் மழையால் நிரம்பின. பருவம் தவறி பெய்த இந்த மழையால் அறுவடைக்கு தயாரான நெல் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
11 பேர் பலி
இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு குளம், கண்மாய்கள் நிரம்பியதால் சிறுவர்-சிறுமிகள் உற்சாகம் அடைந்தனர். அவர்கள் அந்த குளம், கண்மாய்களுக்கு சென்று குளித்தனர். இதில் நீச்சல் தெரியாததால் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 11 சிறுவர்-சிறுமிகள் நீரில் மூழ்கி பலியாகி விட்டனர் என்பது வேதனையான விஷயம். இதை தொடர்ந்து சிறுவர், சிறுமிகளை பெற்றோர் தங்கள் கண்காணிப்பில் வைத்து இருக்க வேண்டும். நீர்நிலைகளுக்கு தனியாக குளிப்பதற்கு அனுப்பக்கூடாது என தீயணைப்புத்துறையினரும், மாவட்ட நிர்வாகமும் கேட்டு கொண்டது.
சிறுவர்கள் உற்சாக குளியல்
இந்த நிலையில் சி்ங்கம்புணரி அருகே பிரான்மலை பக்கம் உள்ள பிடாரி அம்மன் கோவில் குளம் தற்போது நீர்நிரம்பி காணப்படுகிறது. சமீபத்தில் அது தூர்வாரப்பட்டு இருந்ததால் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது. பிரான்மலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சிறுவர், சிறுமிகள் இங்கு வந்து உற்சாகத்துடன் டைவ் அடித்து குளத்தில் குதித்து குளித்து வருகின்றனர். குளம் பராமரிக்கப்பட்டு இருப்பதால் சிறுவர்களின் உற்சாக குளியல் விபரீதமாகி விட கூடாதே என அவர்கள் டைவ் அடித்து குளிப்பதை பார்ப்பவர்கள் மனம் பதை, பதைக்கிறார்கள். சிறுவர்களும் எதையும் கண்டு கொள்ளாமல் டைவ் அடித்து குளத்தில் குதித்து மகிழ்ந்தனர்.
கண்காணிக்க வேண்டும்
Related Tags :
Next Story