கறம்பக்குடியில் தேவேந்திரகுல அமைப்பினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்


கறம்பக்குடியில் தேவேந்திரகுல அமைப்பினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
x
தினத்தந்தி 14 Feb 2021 11:48 PM GMT (Updated: 14 Feb 2021 11:51 PM GMT)

கறம்பக்குடியில் தேவேந்திரகுல அமைப்பினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.

கறம்பக்குடி,

தமிழ்நாட்டில் பட்டியல் சாதியின் 7 உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என பெயர் சூட்ட வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து முதல்-அமைச்சர் பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு 7 சாதி பிரிவினரை ஒன்றாக இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என பெயரிட்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு வரவேற்பு தெரிவித்து கறம்பக்குடி பகுதி தேவேந்திரகுல அமைப்பினர் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று கறம்பக்குடி சீனிகடை முக்கத்தில் கூடி பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். அப்போது பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் பழனிசாமி ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்து கோஷம் எழுப்பினர்.

Next Story