கரும்பு தோட்டத்தில் தீ


கரும்பு தோட்டத்தில் தீ
x
தினத்தந்தி 15 Feb 2021 6:44 PM GMT (Updated: 15 Feb 2021 6:44 PM GMT)

கரும்பு தோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

வடகாடு, பிப்.16-
வடகாடு அருகே உள்ள சூரன்விடுதியில் கோவில் பட்டியை சேர்ந்த  ரெங்கசாமி என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இது குறித்த அப்பகுதியினர் ஆலங்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை மேலும் பரவவிடாமல் தடுத்து தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். கரும்பு தோட்டம் வழியாக சென்ற மின்கம்பியில் உராய்வு ஏற்பட்டு இந்த தீ விபத்து நடைபெற்றதாக கூறப்படுகிறது.



Related Tags :
Next Story