மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி நண்பர்கள் 2 பேர் பலி


மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி நண்பர்கள் 2 பேர் பலி
x
தினத்தந்தி 15 Feb 2021 8:32 PM GMT (Updated: 15 Feb 2021 8:36 PM GMT)

பொள்ளாச்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி நண்பர்கள் 2 பேர் பலியானார்கள்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி நண்பர்கள் 2 பேர் பலியானார்கள்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆனந்த்(வயது 27). பொக்லைன் எந்திர ஆபரேட்டர். இவரது நண்பர் அதே ஊரை சேர்ந்த பெருமாள்(21). இவர்கள் 2 பேரும், சக நண்பர்களுடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றனர். 3 மோட்டார் சைக்கிள்களில் மொத்தம் 6 பேர் சென்றதாக தெரிகிறது. அதில் ஆனந்த் மற்றும் பெருமாள் ஆகியோர் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர். அதனை ஆனந்த் ஓட்டினார். 

பின்னர் அவர்கள் அங்கிருந்து ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தனர். பொள்ளாச்சி-உடுமலை ரோட்டில் கெடிமேடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு வந்து கொண்டு இருந்தனர். அப்போது ஆனந்த் மற்றும் பெருமாள் வந்த மோட்டார் சைக்கிள் மீது எதிரே வந்த ஆம்னி பஸ் பயங்கரமாக மோதியது. 

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து கோமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்தை ஏற்படுத்திய ஆம்னி பஸ் டிரைவரான சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலை சேர்ந்த பாலமுருகனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story