ஏரிக்கரை ஆக்கிரமிப்பு அகற்றம்


ஏரிக்கரை ஆக்கிரமிப்பு அகற்றம்
x
தினத்தந்தி 16 Feb 2021 5:53 PM GMT (Updated: 16 Feb 2021 5:53 PM GMT)

அறந்தாங்கி அருகே ஏரிக்கரை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

அறந்தாங்கி, பிப்.17-
அறந்தாங்கி அருகே  மேலப்பட்டு மேலசூரியகுளம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் கரையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக புகார் வந்தது. அதன்பேரில் நேற்று தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்து ஆக்கிரமிப்பு பகுதியை கண்டறிந்தனர். இதைத்தொடர்ந்து பொக்லைன்எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

Next Story