மருமகனை கண்டித்த மாமியாருக்கு கத்திக்குத்து


மருமகனை கண்டித்த மாமியாருக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 16 Feb 2021 7:08 PM GMT (Updated: 16 Feb 2021 7:08 PM GMT)

கத்தியை எடுத்து வந்து ஜெயலட்சுமியின் முதுகில் குத்தினார்.

லாலாபேட்டை
லாலாபேட்டையை அடுத்த கம்மநல்லூரை சேர்ந்தவர் சிவா என்கிற சூரியன். இவரது மனைவி அதே ஊரைச் சேர்ந்த சூர்யா. இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது. சம்பவத்தன்று சூரியன், மது குடித்து விட்டு வந்ததாக தெரிகிறது. இதகுறித்து மனைவி சூர்யா தனது தாயாரிடம் கூறினார். அப்போது மருமகனை, மாமியார் ஜெயலட்சுமி கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த சூரியன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து ஜெயலட்சுமியின் முதுகில் குத்தினார். இதில் காயமடைந்த அவர் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில், லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story