மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா


மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா
x

மேலும் 4 பேருக்கு கொரோனா

விருதுநகர்,
மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 625 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் வரை 4 லட்சத்து 10 ஆயிரத்து 974 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 16,621 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. 16 ஆயிரத்து 374 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 20 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை. மாவட்ட சுகாதாரத்துறை வழக்கம் போல் மருத்துவ பரிசோதனை முடிவுகளை வெளிப்படையாக தெரிவிக்காதநிலை தொடர்கிறது.

Next Story