மோட்டார் சைக்கிள்கள் மோதல்;வாலிபர் பலி


மோட்டார் சைக்கிள்கள் மோதல்;வாலிபர் பலி
x
தினத்தந்தி 16 Feb 2021 9:42 PM GMT (Updated: 16 Feb 2021 9:42 PM GMT)

கன்னியாகுமரியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் வாலிபர் ஒருவர் பலியானார் இன்னொருவர் படுகாயம் அடைந்தார்.

கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் வாலிபர் ஒருவர் பலியானார் இன்னொருவர் படுகாயம் அடைந்தார்.
இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-
விபத்து
கொட்டாரம் அருகே உள்ள சுந்தர புரத்தை சேர்ந்த சவுந்தர்ராஜன் மகன் ஸ்ரீதர் (வயது 25). அதே பகுதியை சேர்ந்தவர் ஹரீஸ் (20). இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆவார்கள். 
இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சம்பவத்தன்று கொட்டாரத்தில் இருந்து கன்னியாகுமரி நோக்கி சென்று கொண்டிருந்தனர். விவேகானந்தபுரம் சந்திப்பில் சென்று கொண்டு இருந்தபோது எதிரே இன்னொரு மோட்டார் சைக்கிளில் வாலிபர் வந்தார்.  இரு மோட்டார் சைக்கிள்களும் மோதிக்கொண்டன.
சாவு
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த ஸ்ரீதர் மற்றும் ஹரீஸ் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். ஸ்ரீதர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
ஹரீஸ் படுகாயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான ஸ்ரீதரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story