தண்டையார்பேட்டையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சி.ஐ.டி.யூ. ஆர்ப்பாட்டம்


தண்டையார்பேட்டையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சி.ஐ.டி.யூ. ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Feb 2021 5:04 AM GMT (Updated: 17 Feb 2021 5:04 AM GMT)

தண்டையார்பேட்டை ஐ.ஓ.சி. பஸ் நிறுத்தம் அருகே பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியின் சி.ஐ.டி.யூ.சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர். ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஐ.ஓ.சி. பஸ் நிலையத்திலிருந்து பேரணியாகச் சென்று இந்தியன் ஆயில் நிறுவனம் முன்பு நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பெரம்பூர்,

தண்டையார்பேட்டை ஐ.ஓ.சி. பஸ் நிறுத்தம் அருகே பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியின் சி.ஐ.டி.யூ.சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர். ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஐ.ஓ.சி. பஸ் நிலையத்திலிருந்து பேரணியாகச் சென்று இந்தியன் ஆயில் நிறுவனம் முன்பு நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல் விலை டீசல் விலையை குறைவுக்கு காரணமான மத்திய,மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். இந்த தகவல் அறிந்த ஆர்.கே.நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story