வாகனங்கள் பறிமுதல்
வாகனங்கள் பறிமுதல்
இளையான்குடி
இளையான்குடி புறவழிச்சாலையில் சிவகங்கை புவியியல் மற்றும் சுரங்கத்துறை தனி வருவாய் ஆய்வாளர் அறிவுச்சுடர்(வயது 43). தலைமையில் அலுவலக பணியாளர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி ஆவணங்களை சரி பார்த்தனர். இதில் அரசு அனுமதியின்றி கரம்பை மண் கடத்தப்படுவது தெரியவந்தது. லாரி டிரைவர் கீழாயூர் காலனியை சேர்ந்த பூமிநாதன்(47) என்பவரை கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.
இதேபோல மற்றொரு சோதனையில் பெரிய வண்டாளை கிராமத்தை சேர்ந்த தர்மராஜ்(38) என்பவர் அரசு அனுமதியின்றி லாரியில் கிராவல் மண் கடத்துவது தெரிய வந்துள்ளது. அவரையும் கைது செய்து இளையான்குடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. இளையான்குடி போலீசார் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story