கற்போம் எழுதுவோம் இயக்க பயிற்சி வகுப்பு


கற்போம் எழுதுவோம் இயக்க பயிற்சி வகுப்பு
x
தினத்தந்தி 17 Feb 2021 7:03 PM GMT (Updated: 17 Feb 2021 7:03 PM GMT)

கற்போம் எழுதுவோம் இயக்க பயிற்சி வகுப்பு

காளையார்கோவில்
கற்போம் எழுதுவோம் இயக்கம் என்ற புதிய வயது வந்தோர் திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தும் விதமாக காளையார்கோவில் ஒன்றியத்தில் கொட்டகுடி, கொல்லாம்பட்டி, கீழக்கோட்டை, பொய்யாமணிபட்டி, சடையம்பட்டி ஆகிய ஊராட்சியில் பயிற்சி வகுப்புகள் நடந்து வருகிறது. மேலும் கற்போருக்கு தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழும் வழங்கப்படவுள்ளது. இந்த பகுதியிலுள்ள கல்லாதவருக்கு ஊராட்சி மன்றம், தலைமையாசிரியை, பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் இணைந்து கையெழுத்து போட கற்றுத்தருவது என்றும், அதற்கு மாணவர்கள், படித்தவர்கள் அனைவரும் உதவுவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முன்பாக ஆளுக்கொரு தீபமேற்றி கற்போம், எழுதுவோம் என்ற கோஷத்தோடு தொடங்கப்பட்ட கையெழுத்து இயக்கத்தின் பயிற்சி வகுப்பினை காளையார்கோவில் வட்டார கல்வி அலுவலர் இந்திராணி பார்வையிட்டார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்ட தலைவர் ஆரோக்கியசாமி கலந்து கொண்டார். இதில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

Next Story