வாலிபரை வெட்டிய வழக்கில் மேலும் 2 பேர் கைது


வாலிபரை வெட்டிய வழக்கில் மேலும் 2 பேர் கைது
x
தினத்தந்தி 18 Feb 2021 7:43 PM GMT (Updated: 18 Feb 2021 7:43 PM GMT)

வாலிபரை வெட்டிய வழக்கில் மேலும் 2 பேர் கைது

ராமநாதபுரம்
ராமநாதபுரம் சக்கரக்கோட்டை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த 10-ந் தேதி சிலர் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது ராமநாதபுரம் எம்.எஸ்.கே. நகர் பகுதியை சேர்ந்த  பால சபரிகிஷோர்(வயது 23) என்பவரை ஒரு கும்பல் வாள் கத்தியால் வெட்டியது. இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏற்கனவே 4 பேரை கைது செய்திருந்தனர். மேலும் இந்த வழக்கில் எம்.எஸ்.கே. நகரை சேர்ந்த விக்னேஷ்(26), ஆர்.எஸ்.மடையை சேர்ந்த குமார் (28) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Next Story