கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்


கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 20 Feb 2021 8:44 PM GMT (Updated: 20 Feb 2021 8:44 PM GMT)

கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை தேவாங்கர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்  காவலர்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது. இதில் அருப்புக்கோட்டை டவுன், தாலுகா, மகளிர் போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசாருக்கு சுகாதாரத்துறை மருத்துவர்கள் கொரோனா தடுப்பூசி போடும் பணியை மேற்கொண்டனர். முன்னதாக போலீசாருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அருப்புக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சகாய ஜோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டார். அதனைத்தொடர்ந்து ஆண் மற்றும் பெண் போலீசார் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டனர். இதில் டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணன், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜபுஷ்பா, நகராட்சி மருத்துவ அலுவலர் கோமதி, சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டி, போலீசார், மருத்துவப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story