மதுவிற்ற 2 பேர் கைது


மதுவிற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 21 Feb 2021 7:57 PM GMT (Updated: 21 Feb 2021 11:13 PM GMT)

மதுவிற்ற 2 பேர் கைது

சாத்தூர் நகராட்சி பூங்கா அருகில் வைத்து மதுபாட்டில் விற்ற சாத்தூரை சேர்ந்த போஸ்பாண்டியன் (வயது51) என்பவரிடம் இருந்து 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த சாத்தூர் டவுன் போலீசார் அவரை கைது செய்தனர். அதேபோல சாத்தூர் அருகே ஒத்தையால் கிராமத்தில் பெட்டி கடையில் வைத்து மதுபாட்டில் விற்ற அதேகிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (58) என்பவரிடம் இருந்து 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த சாத்தூர் தாலுகா போலீசார் அவரை கைது செய்தனர்.

Next Story