காத்திருப்பு போராட்டம்


காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 22 Feb 2021 7:31 PM GMT (Updated: 22 Feb 2021 7:31 PM GMT)

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

கரூர்
சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்தபடி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் அனைவரையும் அரசு ஊழியராக்க வேண்டும். அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். பணி ஓய்வு பெறும்போது பணி கொடையாக ஊழியருக்கு ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் பத்மாவதி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் ஜீவானந்தம் சிறப்புரையாற்றினார். செயலாளர் சாந்தி, பொருளாளர் கலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story