ஒயிலாட்ட கலைஞர் தீக்குளிக்க முயற்சி


ஒயிலாட்ட கலைஞர் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 22 Feb 2021 8:48 PM GMT (Updated: 22 Feb 2021 8:48 PM GMT)

ஒயிலாட்ட கலைஞர் தீக்குளிக்க முயற்சி

மதுரை
மதுரை சோழவந்தான் அருகே உள்ள மண்ணாடிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 68). ஒயிலாட்ட கலைஞர். மாணவர்களுக்கு ஒயிலாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலைகளை கற்று தருகிறார். இவர் தனக்கு கலைமாமணி விருது கேட்டு 2 முறை விண்ணப்பம் செய்து உள்ளார். ஆனால் அவருக்கு இந்த விருது வழங்கப்படவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவர், மண்எண்ணெய் கேனுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு நுழைவுவாயில் முன்பு திடீரென்று மண் எண்ணெய் கேனை திறந்து தன் மீது ஊற்றி தற்கொலை முயற்சி செய்தார். ஆனால் அங்கிருந்த போலீசார், ராஜேந்திரனை மடக்கி பிடித்து அவரிடம் இருந்து தீப்பெட்டியை பறித்தனர். மேலும் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், தனக்கு கலைமாமணி விருது வழங்க வில்லை என்பதால் தீக்குளிக்க முயற்சித்தேன் என்று கூறியுள்ளார்.  போலீசார் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Next Story