லாலாபேட்டையை அடுத்த பழைய ஜெயங்கொண்டத்தில் புகழ்பெற்ற ஆளவந்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வருடாபிஷேகத்தையொட்டி நேற்று 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து யாகசாலையில் வைத்து ஹோமங்கள் வளர்த்து பூஜைகள் நடந்தது. தொடர்ந்து 108 சங்குகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.