மாற்றுத்திறனாளிகள் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்
விருதுநகர்,
தமிழ்நாடு அனைத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் உரிமை பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் விருதுநகர் கலெக்டர் அலுவலகம் மற்றும் ராஜபாளையம் தாலுகா அலுவலகம் ஆகிய இடங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி குடியேறும் போராட்டம் நடைபெற்றது.
மாதாந்திர உதவித்தொகையினை ரூ.3ஆயிரத்திலிருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்த வலியுறுத்தி நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் நாகராஜன் தலைமையில் 105 பெண்கள் உள்பட 250 பேர் கலந்து கொண்டனர்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் கடந்த நவம்பர் மாத இறுதியில் இருந்து விவசாயிகள் போராடி வருகின்றனர். இதில் அவ்வப்போது பல்வேறு காரணங்களால் உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகின்றன.
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் அதிகத்தூர் கிராமத்தில் தனியார் கார் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு நிறுவனத்தில் பணி வழங்கக்கோரி தொழிற்சாலை முன்பு பலகட்ட போராட்டங்களை கிராமத்தினர் நடத்தினர்.