ஓமலூர்-மேச்சேரி இடையே அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நாளை நடக்கிறது
ஓமலூர்-மேச்சேரி இடையே அதிவேக ரெயில் சோதனை ஓட்டம்
சூரமங்கலம்;
சேலம் ரெயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சேலம் மாவட்டம் ஓமலூர்-மேச்சேரி ரோடு ரெயில் நிலையங்களுக்கு இடையே 2-வது அகல ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதையில் நாளை (வியாழக்கிழமை) மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடக்கிறது. இதனை தென்னக ரெயில்வேயின், பெங்களூரு ரெயில்வே பாதுகாப்பு ஆணையாளர் ஆய்வு செய்ய உள்ளார். அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடப்பதால், நாளை அந்த பகுதியில் பொதுமக்கள் தண்டவாளத்தில் நடந்து செல்லவோ, அதனை கடக்கவோ வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story