மெத்தை தயாரிக்கும் கடையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


மெத்தை தயாரிக்கும் கடையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 25 Feb 2021 5:46 AM GMT (Updated: 25 Feb 2021 5:46 AM GMT)

பெரம்பூர் அருகே மெத்தை தயாரிக்கும் கடையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெரம்பூர், 

சென்னை கொடுங்கையூர் எழில் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 24). இவர், கொடுங்கையூர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் சோபா, மெத்தை தயாரிக்கும் கடையில் அங்கேயே தங்கி வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையில் தங்கிய பிரகாஷ், திடீரென சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Next Story