உதவி தொகையை உயர்த்தி வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் 15 பெண்கள் உள்பட 55 பேர் கைது + "||" + 55 people, including 15 women, were arrested in a road blockade by disabled people demanding an increase in aid
உதவி தொகையை உயர்த்தி வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் 15 பெண்கள் உள்பட 55 பேர் கைது
உதவி தொகையை உயர்த்தி வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் மயிலாடுதுறையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 15 பெண்கள் உள்பட 55 பேரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை,
மாற்றுத்திறனாளிகளின் உதவி தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். தனியார் துறை வேலைவாய்ப்பில் 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பல்வேறு கட்ட போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் மாற்றுத்திறனாளிகள் மயிலாடுதுறை பட்டமங்கலத்தெரு மணிக்கூண்டு அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2-வது நாளாக நேற்று அதன் மாவட்ட செயலாளர் கணேசன் தலைமையில் பஸ் நிலையம் அருகே காந்திஜி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
55 பேர் கைது
மறியலில் ஈடுபட்டவர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேல் மற்றும் போலீசார் கைது செய்தனர். இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்பட 55 மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
ஆத்தூர் தொகுதியில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது அ.தி.மு.க., தி.மு.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டது. பா.ம.க. நிர்வாகியை கத்தியால் குத்தியதாக கூறப்பட்டதால் அடுத்தடுத்து சாலை மறியல் நடந்தது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே டெல்லி வழித்தடத்தில் தேவிதாஸ்பூர் என்ற இடத்தில் விவசாயிகள் சிலர் ரெயில் மறியல் போராட்டம் நடத்தி வந்தனர். 169 நாட்களாக நீடித்த இந்த போராட்டத்தை விவசாயிகள் நேற்று வாபஸ் பெற்றனர்.
கிருஷ்ணகிரியில் டயரில் பெட்ரோல் ஊற்றி மர்ம நபர்கள் பெரியார் சிலைக்கு தீ வைத்து சென்றனர். இதை கண்டித்து பொதுமக்கள், அரசியல் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.