நொய்யல் அருகே உள்ள தோட்டக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் பரத் (வயது 21). இவர் 15 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி 3 முறை உடலுறவு கொண்டுள்ளார். இதனால் கர்ப்பம் அடைந்த அந்த சிறுமிக்கு அரசு மருத்துவனையில் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து அந்த சிறுமி கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பாரதி, பரத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.