சேலம் மாவட்டத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று


சேலம் மாவட்டத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 27 Feb 2021 8:44 PM GMT (Updated: 27 Feb 2021 8:44 PM GMT)

சேலம் மாவட்டத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 12 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்றும் 12 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 6 பேர், மேச்சேரி, நங்கவள்ளி, சேலம் ஒன்றியம், வீரபாண்டி, வாழப்பாடி, நரசிங்கபுரம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர்.
அவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 13 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

Next Story