டாக்டர், செவிலியரின் செல்போன்கள் திருட்டு


டாக்டர், செவிலியரின் செல்போன்கள் திருட்டு
x
தினத்தந்தி 28 Feb 2021 3:31 PM GMT (Updated: 28 Feb 2021 3:31 PM GMT)

டாக்டர், செவிலியரின் செல்போன்கள் திருட்டு பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் சிகில்ராஜவீதியில் தனியார் ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வரும் சரிதா மற்றும் செவிலியர் தேவி ஆகியோர் தங்களின் செல்போன்களை டாக்டரின் அறையில் சார்ஜ் போட்டுவிட்டு வார்டுகளுக்கு சென்றுவிட்டனர். திரும்பி வந்து பார்த்தபோது அந்த 2 செல்போன்களையும் காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்றுவிட்டனர். 
இதுகுறித்து டாக்டர் சரிதா அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.

Next Story