காருக்கு தீ வைப்பு


காருக்கு தீ வைப்பு
x
தினத்தந்தி 28 Feb 2021 5:13 PM GMT (Updated: 28 Feb 2021 5:13 PM GMT)

மேல்மலையனூா் அருகே காருக்கு தீ வைக்கப்பட்டது.

மேல்மலையனூர், 

மேல்மலையனூர் அருகே உள்ள ரோடுபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகன் விஜயகுமார்(வயது 37). இவர் தனக்கு சொந்தமான காரை நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு நிறுத்தி வைத்து இருந்தார். நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள், காருக்கு தீ வைத்தனர். இதில் மளமளவென கார் முற்றிலுமாக எரிந்து, எலும்புக்கூடு போல் ஆனது. இது குறித்து விஜயகுமார் கொடுத்த புகாரின் பேரில் அவலூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story