மீனவர் வலையில் சிக்கிய 20 கிலோ எடை கொண்ட மீன்
மீனவர் வலையில் சிக்கிய 20 கிலோ எடை கொண்ட மீன்
கோட்டைப்பட்டினம்:
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் எண்ணற்ற விசைப்படகுகளில் கடலுக்குள் மீன்பிடிக்கச் மீனவர்கள் சென்றனர். அவர்கள் மீன் பிடித்துக் கொண்டு வழக்கம்போல் நேற்று காலை கரை திரும்பினர். அப்போது ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர் ஒருவர் வலையில், 20 கிலோ எடை கொண்ட வஞ்சிரம் மீன் சிக்கி இருந்தது. இதனால் அந்த மீனவர் மகிழ்ச்சி அடைந்தார். இந்த வஞ்சரம் மீன் ரூ.14 ஆயிரத்திற்கு விலை போனது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story