டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதல்


டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதல்
x
தினத்தந்தி 28 Feb 2021 6:42 PM GMT (Updated: 28 Feb 2021 6:42 PM GMT)

டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதல்

கிருஷ்ணராயபுரம்
டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதல்
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா அழகாபுரியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 35). இவரது மகள் சந்தியா (11). இந்தநிலையில் நேற்று முன்தினம் நாகராஜ் தனது மோட்டார் சைக்கிளில் சந்தியாவை அழைத்து கொண்டு சொந்த வேலை நிமித்தாக சேங்கல் சென்றார். பின்னர் அதே மோட்டார் சைக்கிளில் 2 பேரும் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். 
அப்போது கிருஷ்ணராயபுரம் சேங்கல் பகுதியில் சுடுகாடு அருகே வந்தபோது, சாலையோரம் நின்று கொண்டிருந்த டிராக்டரின் பின் பகுதியில் நாகராஜ், சந்தியா வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட நாகராஜ் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார். சந்தியா காயமடைந்தார்.
தந்தை பலி- மகள் காயம்
இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் மாயனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் தந்தை, மகளையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று நாகராஜ் பரிதாபமாக இறந்தார். 
சந்தியாவிற்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story