திருச்சியில் உள்ள சமாதியில் பல்வேறு அமைப்பினர் அஞ்சலி
திருச்சியில் உள்ள சமாதியில் பல்வேறு அமைப்பினர் அஞ்சலி
திருச்சி
தமிழ் திரையுலகில் பல ஆண்டுகளுக்கு முன்பு முடிசூடா மன்னராக வலம் வந்தவர் நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதர். நடிப்பு, இசை இரண்டிலும் சூப்பர் ஸ்டாராக விளங்கியதால் இவர் ஏழிசை மன்னர் என அழைக்கப்பட்டார். இவரது 112-வது பிறந்தநாள் விழா நேற்று திருச்சியில் நடைபெற்றது. இதனையொட்டி திருச்சி சங்கிலியாண்டபுரம் மணல்வாரி துறை சாலை இடுகாட்டில் உள்ள தியாகராஜபாகவதர் சமாதியில் நேற்று தமிழ்நாடு விஸ்வகர்ம மக்கள் கட்சி, விஸ்வகர்மா மகாஜன சபை மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. விஸ்வகர்மா அமைப்பைச் சேர்ந்தவர்கள் அங்கு திருவாசகம் படிக்கும் நிகழ்ச்சியையும் நடத்தினார்கள். மேலும் அன்னதானம் உள்பட பல நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
தமிழ் திரையுலகில் பல ஆண்டுகளுக்கு முன்பு முடிசூடா மன்னராக வலம் வந்தவர் நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதர். நடிப்பு, இசை இரண்டிலும் சூப்பர் ஸ்டாராக விளங்கியதால் இவர் ஏழிசை மன்னர் என அழைக்கப்பட்டார். இவரது 112-வது பிறந்தநாள் விழா நேற்று திருச்சியில் நடைபெற்றது. இதனையொட்டி திருச்சி சங்கிலியாண்டபுரம் மணல்வாரி துறை சாலை இடுகாட்டில் உள்ள தியாகராஜபாகவதர் சமாதியில் நேற்று தமிழ்நாடு விஸ்வகர்ம மக்கள் கட்சி, விஸ்வகர்மா மகாஜன சபை மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. விஸ்வகர்மா அமைப்பைச் சேர்ந்தவர்கள் அங்கு திருவாசகம் படிக்கும் நிகழ்ச்சியையும் நடத்தினார்கள். மேலும் அன்னதானம் உள்பட பல நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
Related Tags :
Next Story