ராசிபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் பலி


ராசிபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் பலி
x
தினத்தந்தி 3 March 2021 6:06 PM GMT (Updated: 3 March 2021 6:06 PM GMT)

ராசிபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் பலி

ராசிபுரம்:
ராசிபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் பலியானார்.
பூ பறிக்கும் வேலை
ராசிபுரம் அருகே உள்ள ஜே.ஜே. காலனி பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ராஜாமணி (வயது 36). இவர் விவசாய தோட்டத்தில் பூ பறிக்கும் வேலை செய்து வந்தார். 
இவர் இரவு நேரங்களில் பூ பறிக்க பேட்டரி விளக்கை பயன்படுத்தி வந்தார். இந்த நிலையில் பேட்டரி விளக்கிற்கு சார்ஜ் போடுவதற்காக சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் ராஜாமணி தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்ததாக கூறப்படுகிறது. 
விசாரணை
இதுகுறித்து அறிந்ததும் சம்பவ இடத்திற்கு ராசிபுரம் போலீசாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து சென்றனர். பின்னர் ராஜாமணியின் உடலை கிணற்றில் இருந்து மீட்டனர். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
கிணற்றில் விழுந்து இறந்த ராஜாமணிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
=======
=========

Next Story