89 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்
89 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்
ராமநாதபுரம்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதை தொடர்ந்து அரசு அலுவலர்கள், போலீசார் அதற்கேற்ப பணியிட மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றனர். இதன்படி ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் பணியாற்றி வந்த 89 சப்-இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. மயில்வாகனன் உத்தரவிட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் பணியாற்றி வந்த திருப்புல்லாணி திபாகர், திருப்பாலைக்குடி சிவலிங்கபெருமாள், கேணிக்கரை குகனேஸ்வரன், உச்சிப்புளி ஜோதிமுருகன் உள்பட 48 பேர் சிவகங்கை மாவட்டத்திற்க பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல, சிவகங்கை மாவட்டத்தில் பணியாற்றி வந்த திருப்பாச்சேத்தி ஜெகதீசன், சிவகங்கை தாலுகா ஜான்பிரிட்டோ, இளையான்குடி முருகேசன் உள்பட 41 பேர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆக மொத்தம் ராமநாதபுரம் சரகத்திற்கு உட்பட்ட ராமநாதபுரம், சிவகங்கையில் 89 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story