விஷம் குடித்து பெண் தற்கொலை


விஷம் குடித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 4 March 2021 7:24 PM GMT (Updated: 4 March 2021 7:24 PM GMT)

விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

கரூர்
கரூர் ஆத்தூர் அருகே உள்ள கள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவரது மனைவி லட்சுமி (வயது 56) கடந்த சில மாதங்களாக இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட லட்சுமி நேற்று முன்தினம் விஷம் குடித்த நிலையில் வீட்டில் மயங்கி கிடந்தார். இதையடுத்து உறவினர்கள் லட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக கரூர் காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு லட்சுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக ெதரிவித்தனர். இந்த தற்கொலை சம்பவம் குறித்து கரூர் வாங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.



Next Story