ஆழ்துளை கிணறு அமைக்கும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது


ஆழ்துளை கிணறு அமைக்கும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது
x
தினத்தந்தி 4 March 2021 7:53 PM GMT (Updated: 4 March 2021 7:53 PM GMT)

லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது

திருச்சி
ஆழ்துளை கிணறு(போர்வெல்) அமைத்து கொடுக்கும் லாரி  உரிமையாளர்கள் டீசல் விலை உயர்வு மற்றும் ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களான பி.வி.சி. பைப்புகள் ஏமர் கருவி மற்றும் பிட் ஆகியவற்றின் விலை உயர்வை கண்டித்து 4 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி, போர்வெல் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அவர்கள் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் ரிக் எந்திரங்களுடன் கூடிய லாரிகள் திருச்சி-மதுரை பைபாஸ் சாலையில் ஒரு காலி இடத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Next Story