தேர்தல் முன்னெச்சரிக்கையாக 5 பேர் கைது


தேர்தல் முன்னெச்சரிக்கையாக 5 பேர் கைது
x
தினத்தந்தி 4 March 2021 8:25 PM GMT (Updated: 4 March 2021 8:25 PM GMT)

நெல்லையில் தேர்தல் முன்னெச்சரிக்கையாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை, மார்ச்:
நெல்லை மாநகரில் தேர்தல் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயல்படுவோரை கைது செய்ய போலீஸ் கமிஷனர் அன்பு உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் தச்சநல்லூர் போலீசார் அந்த பகுதியை சேர்ந்த அருண்குமார், வினோத் பாண்டியன் உள்பட 3 பேரை கைது செய்தனர். பாளையங்கோட்டை சமாதானபுரம் பகுதியில் ரகளை செய்ததாக மேலக்குளத்தை சேர்ந்த கணேசன், விக்னேஷ் ஆகிய 2 பேரையும் பாளையங்கோட்டை போலீசார் கைது செய்தனர்.
இதே போல் நெல்லை புறநகர், தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவின்குமார் அபிநபு உத்தரவிட்டுள்ளார்.

Next Story