மொபட் மீது சரக்கு வேன் மோதி; சமையல் தொழிலாளி பலி
கிருஷ்ணகிரி அருகே மொபட் மீது சரக்கு வேன் மோதியதில் சமையல் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகே உள்ள பீமாண்டப்பள்ளியை அடுத்து புலியஞ்சேரி உள்ளது. இந்த ஊரைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 40). இவர் ஓட்டல் ஒன்றில் சமையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று அவர் மொபட்டில் கிருஷ்ணகிரி -சென்னை சாலையில் தண்டேகுப்பம் அருகில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக சென்ற சரக்கு வேன் அவர் சென்ற மொபட் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கோவிந்தசாமி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story