ரெயில் மோதி தொழிலாளி சாவு


ரெயில் மோதி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 4 March 2021 9:34 PM GMT (Updated: 4 March 2021 9:34 PM GMT)

ஈரோட்டில் ரெயில் மோதி தொழிலாளி ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

ஈரோடு
ஈரோடு ரெயில் நிலையத்துக்கும், காவிரி ரெயில் நிலையத்துக்கும் இடைப்பட்ட தண்டவாள பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணையில் இறந்தவா், ஈரோடு நேதாஜி ரோடு முனிசிபல் சத்திரம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி செல்வன் (வயது 49) என்பதும், இவர் ரெயில்வே தண்டவாளத்தை கவனக்குறைவாக கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த ரெயில் மோதி இறந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story