மின்சாரம் தாக்கி கோழி இறைச்சி கடை ஊழியர் பலி


மின்சாரம் தாக்கி கோழி இறைச்சி கடை ஊழியர் பலி
x
தினத்தந்தி 5 March 2021 5:09 AM GMT (Updated: 5 March 2021 5:09 AM GMT)

மின்சாரம் தாக்கி கோழி இறைச்சி கடை ஊழியர் இறந்தார்.

சென்னை கொருக்குப்பேட்டை அம்பேத்கர் நகர் 5-வது தெருவைச் சேர்ந்தவர் ஹயாத் பாஷா (வயது 42). இவர், கொருக்குப்பேட்டை கார்நேசன் நகர் காந்தி தெருவில் உள்ள கருணாகரன் என்பவருக்கு சொந்தமான கோழி இறைச்சி கடையில் வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு கடையில் வியாபாரம் முடிந்ததும், கோழிகளை சுத்தம் செய்யும் எந்திரத்தை சுத்தம் செய்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட ஹயாத் பாஷா, அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 


Next Story