பொக்லைன் எந்திரத்தை திருடிய வாலிபர் கைது
பொக்லைன் எந்திரத்தை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கரூர்
நாமக்கல் மாவட்டம் ஆத்தூர் நத்தமேடு பகுதியை சேர்ந்தவர் செந்தில் ராஜா. இவருக்கு சொந்தமான பொக்லைன் எந்திரத்தை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து செந்தில்ராஜா தாந்தோணிமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காளிமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், பொக்லைன் எந்திரத்தை திருடியது கரூர் மாவட்டம், வீரசிங்கம் பட்டியை சேர்ந்த விக்னேஷ்குமார் (வயது 21) என்பது தெரியவந்தது. இதையடுத்து விக்னேஷ்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story