கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது
தினத்தந்தி 5 March 2021 7:02 PM GMT (Updated: 5 March 2021 7:02 PM GMT)
Text Sizeகத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கரூர்
கரூர் சேலம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் தென்னவன் (வயது 35). இவர் அப்பகுதி வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கரூர் திருமாநிலையூரை சேர்ந்த ராமர் (29) என்பவர், தென்னவனிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.200-ஐ பறித்துள்ளார். இதுகுறித்து தென்னவன் பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, ராமரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire