மது விற்ற 27 பேர் கைது


மது விற்ற 27 பேர் கைது
x
தினத்தந்தி 5 March 2021 8:38 PM GMT (Updated: 5 March 2021 8:38 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் மது விற்ற 27 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை, மார்ச்:
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்திருப்பதால் நெல்லை மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவுப்படி போலீசார் தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 27 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த 117 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

Next Story