கவுந்தப்பாடியில் துணைராணுவ படையினர் கொடி அணிவகுப்பு


கவுந்தப்பாடியில் துணைராணுவ படையினர் கொடி அணிவகுப்பு
x
தினத்தந்தி 5 March 2021 10:02 PM GMT (Updated: 5 March 2021 10:02 PM GMT)

கவுந்தப்பாடியில் துணைராணுவ படையினர் கொடி அணிவகுப்பு நடந்தது.

கவுந்தப்பாடி
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதையொட்டி பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் விதமாகவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நேற்று மாலை 5 மணி அளவில் கவுந்தப்பாடியில் நடைபெற்றது.
கவுந்தப்பாடி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இருந்து தொடங்கிய அணிவகுப்பு கவுந்தப்பாடி முக்கிய வீதிகள் வழியாக சென்று அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முடிவடைந்தது. இந்த அணிவகுப்பில் ஈரோடு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி மற்றும் கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், கோபி இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், கவுந்தப்பாடி இன்ஸ்பெக்டர் கண்ணன், துணை ராணுவ படையினர் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Next Story