வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 6 March 2021 1:37 PM GMT (Updated: 6 March 2021 1:37 PM GMT)

தென்தாமரைகுளம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தென்தாமரைகுளம்:
தென்தாமரைகுளம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 
 தொழிலாளி
தென்தாமரைகுளத்தை சேர்ந்தவர் மரிய ஜாண்சன் மனைவி மரிய பன்னீர்செல்வம். இவர்களுக்கு 3 மகள்களும், சகாய ராஜதுரை (வயது 28) என்ற மகனும் உண்டு. சகாய ராஜதுரை கட்டிடங்களில் தரைக்கு மார்பிள் பதிக்கும் தொழில் செய்து வந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு மரிய ஜாண்சன் இறந்து விட்டார்.
இந்தநிலையில், 3 மகள்களுக்கும் திருமணம் முடிந்து விட்டது. இதையடுத்து மரிய பன்னீர்செல்வம் தன்னுடைய மகன் சகாயராஜ துரைக்கும் திருமணம் செய்ய பெண் தேடி வந்துள்ளார். 
தற்கொலை
இதை அறிந்த சகாயராஜதுரை, தாயாரிடம் எனக்கு திருமணம் செய்ய விருப்பமில்லை என கூறியுள்ளார். ஆனால் சகாய ராஜதுரைக்கு பெண் தேடுவதை மரிய பன்னீர்செல்வம் விடவில்லை. இதனால் சகாய ராஜதுரை மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது சகாயராஜ துரை மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் வெளியே சென்றிருந்த மரிய பன்னீர்செல்வம் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது சகாயராஜதுரை தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் கதறி அழுதார். 
விசாரணை
இதுகுறித்து தென்தாமரைகுளம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் சகாய ராஜதுரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story