எட்டயபுரம் அருகே வியாபாரிகளை தாக்கி நகை, பணம் பறிப்பு
எட்டயபுரம் அருகே வியாபாரிகளை தாக்கி நகை, பணத்தை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
எட்டயபுரம்:
எட்டயபுரம் அருகே வியாபாரிகளை தாக்கி நகை, பணத்தை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
ஆடு வியாபாரிகள்
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள மேலக்கரந்தை பகுதியை சேர்ந்தவர் முருகன். தூத்துக்குடி மேலூரைச் சேர்ந்தவர் சந்திரன் (வயது 63). இவர்கள் 2 பேரும் ஆடு வியாபாரிகள் ஆவர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று ஆடுகள் வாங்குவதற்காக 2 பேரும் எட்டயபுரத்திற்கு வந்தனர்.
பின்னர் அங்கு இருந்து இரவில் 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர்.
எட்டயபுரம் அருகே மேலக்கரந்தை பகுதியில் வந்த போது, அவர்கள் பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் 3 மர்ம நபர்கள் வந்தனர்.
நகை, பணம் பறிப்பு
அவர்கள் திடீரென்று முருகன், சந்திரன் ஆகியோரை வழிமறித்து தாக்கினார்கள். பின்னர் அவர்களிடம் இருந்து ரூ.60 ஆயிரம், 12 கிராம் தங்க நகை, செல்போன் ஆகியவற்றை மர்ம நபர்கள் பறித்துக் கொண்டு அங்கு இருந்து தப்பிச் சென்று விட்டனர்.
இதுகுறித்து உடனடியாக எட்டயபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.
Related Tags :
Next Story