திருக்கோவிலூர் அருகே பள்ளி மாணவி கடத்திய வாலிபர் கைது


திருக்கோவிலூர் அருகே பள்ளி மாணவி கடத்திய வாலிபர் கைது
x
தினத்தந்தி 6 March 2021 5:46 PM GMT (Updated: 6 March 2021 5:46 PM GMT)

திருக்கோவிலூர் அருகே பள்ளி மாணவி கடத்திய வாலிபர் கைது

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 14 வயது மாணவி அந்த பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த மாணவியை காங்கியனூரைச் சேர்ந்த ஜீவா(வயது 18), சம்பத், தனலட்சுமி, அர்ஜுனன், ராஜி, சதாசிவம், சத்தி மற்றும் பரசுராமன் ஆகிய 8 பேரும் சேர்ந்து கடத்தி சென்று விட்டதாக தெரிகிறது. 

இது குறித்து மாணவியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் ஜீவா, சம்பத் உள்பட 8 பேர் மீது மணலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து ஜீவாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story