கல்லூரி மாணவி மாயம்


கல்லூரி மாணவி மாயம்
x
தினத்தந்தி 6 March 2021 6:09 PM GMT (Updated: 6 March 2021 6:09 PM GMT)

கல்லூரி மாணவி மாயமானார்

க.பரமத்தி
க.பரமத்தி அருகே ஆரியூர் ஊராட்சி, வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் குணசேகரன். இவருடைய மகள் கார்த்திகா (வயது 19). இவர் கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்தநிலையில் கடந்த 1-ந்தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்ற அவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. இதையடுத்து கார்த்திகாவின் பெற்றோர்கள் உறவினர் மற்றும் தோழிகள் வீட்டிற்கு சென்று தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து க.பரமத்தி போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி வழக்குப்பதிவு செய்து கார்த்திகாவை தேடி வருகிறார்.

Next Story